Saturday, September 18, 2010

பதிவுலக நாட்டாமைகள்

இரண்டு வாரத்துக்கு முதல் தற்செயலாக நான் அறிந்து கொண்ட ஒரு விடயம்..எழுந்தமானமாக வலைபூக்களை 
வாசித்துகொண்டிருக்கும்  போது தற்செயலாக கண்ணில் பட்டது அந்த பதிவு..அந்த தளத்தில் உள்ள பதிவுகள் சிலதை படிக்கும் போதே தெரிந்துகொண்டேன் அது ஒரு கம்யுனிசம் எனும் விஷத்தை கக்கும் ஒரு தளம் என்று...சரி இப்போது பிரச்னைக்கு வருவோம்...மூன்று பதிவர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே பிரச்சனை ஆகும்..அதாவது தென்கிழக்காசிய நாடொன்றில் இருக்கும் பெண் பதிவர் ஒருவரை பற்றி இன்னொரு தென் கிழக்காசிய நாட்டில் இருக்கும் பதிவர் ஒருவரும்,வட அமெரிக்காவில் இருக்கும் பதிவர் ஒருவரும் தவறாக  எழுதிவிட்டார்களாம். அதுவும் புனை கதை என்ற போர்வையில் அந்த பெண்ணை பற்றி தவறாக சித்தரித்து விட்டார்களாம்..

புனை கதையில் ஒரு பெண்ணை தவறாக சித்தரிப்பது தவறுதான்..இதற்கு அந்த பதிவர் என்ன செய்திருக்க வேண்டும்?
தவறாக எழுதியவரின் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடம் 
முறையாக ஒரு புகார் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது போலீசில் சைபர் கிரைம் துறைக்கு 
புகார் கொடுத்திருக்க வேண்டும்..அதை விட்டு கம்யுனிசம் என்ற
பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ஒருகும்பலிடம் முறையிட்டது ஏன்?
ஒரு குழுவாக சேர்ந்து ஒருகம்யுனிச தளத்தைஇயக்கம் 
வர்களின் அலும்பு சொல்லி மாளாது..எதிலும் குற்றம் காணுவது தான் இவர்களின் தொழில்..மேலும் முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று சிறந்த ஜனநாயக தலைவர்களை கூட இவர்கள் இழிவாக சித்தரிக்கிறார்கள்..மேலும் தங்களுக்கு பிடிக்காத பதிவர்கள்,பிரபலங்கள் யாவரையும் படு கேவலமாக எழுதுகிறார்கள்..

கம்யுனிசத்துக்கு ஒத்துவராரத ஒரே ஒரு காரணத்தினால் எல்லா மதத்தை பற்றியும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளி மதநம்பிக்கைகளை கேவலபடுத்துகிறார்கள். ஒரே கட்சி ஆட்சிமுறை என்ற சர்வாதிகாரத்தை பின்பற்றும் இவர்கள் ஏனையோரின் விடுதலையை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாகும்..பதிவுலக நண்பர்களே..உங்களுக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீங்களே தீர்த்துகொள்ளுங்கள் அல்லது ஜனநாயக வழியில் சட்டத்தின் உதவியை நாடுங்கள்..தயவு செய்து இந்த மாதிரி பதிவுலக கட்ட பஞ்சாயத்து தளங்களை நாடவேண்டாம்..இவர்கள் அடுத்தவர் பிரச்சனையை மூலதனமாக்கி அதில் தங்களை இலவசமாக விளம்பரம் செய்து கொள்பவர்கள்...ஜனநாயகம் என்றும் தலை காக்கும்...